யாழில் 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாய் …!

கொடிகாமம் பகுதியில், 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாயொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த தாயாரின் கணவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காலமாகியுள்ளார்.

இந்நிலையில், 12 வயதுடைய தனது மகனை வீட்டில் இருக்கவேண்டாம் என நேற்றிரவு அடித்து விரட்டியுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று இரவு முழுவதும் வீதியிலேயே நின்றுள்ள நிலையில், இன்று காலை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தாயாரை கொடிகாமம் பொலிஸார் இன்று மதியம் கைது செய்ததுடன், மகனை பொலிஸ் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதியும் தாயார் இவ்வாறு தாக்கியதால் அச்சிறுவன் ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சந்தேகநபரை நாளை சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *