யாழில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் செய்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை மேற்கொண்ட கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிறை மது போதையில் இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
