ஒமிக்ரான் திரிபு இந்தியாவில் அடையாளம் காணப்படவில்லை – சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரான் திரிபு இந்தியாவிற்குள் வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வருகைதந்துள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடைய பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே டெல்லியின் தேசிய நுண்மருத்துவத்துறையின் இயக்குனர் சவுமித்ரா தாஸ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ஒமிக்ரான் குறித்த பதற்றம் தேவையில்லை ஆனால் எச்சரிக்கை தேவைக் கூறினார்.

தடுப்பூசிகளை தயக்கம் இல்லாமல் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அது நோயின் தீவிரத்தன்மையைக் குறைப்பதில் உதவும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *