கொரோனா தொற்று மரணங்கள் குறித்த உண்மை விபரத்தை அரசு வெளியிட வேண்டும் – ராகுல் காந்தி

கொரோனா தொற்றினால் குஜராத்தில் மாத்திரம் 3 இலட்சம்பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா தொற்று மரணங்கள் குறித்த உண்மை விபரத்தை அரசு வெளியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு  தொடர்பான அரசின் எண்ணிக்கை தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் குஜராத்தில் மட்டும் 3 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அம்மாநில அரசு 10 ஆயிரம் பேர் வரை மாத்திரமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பலியான ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் தலா 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்  என வலியுறுத்தியுள்ள அவர், கொரோனா கால அனுபவங்களை சில குடும்பங்கள் சொல்லும் காணொலிகளையும் பகிர்ந்திருந்தார்.

Leave a Reply