சீரற்ற காலநிலை காரணமாக 6 ஆயிரத்து 954 குடும்பங்கள் பாதிப்பு !

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மூவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 954 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு 3 வீடுகள் முழுமையாகவும் 83 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் சுமார் 793 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *