ஒமிக்ரோன் தொற்றுடன் பயணிகள் இலங்கை வந்தார்களா? சுற்றுலா அமைச்சு வெளியிட்ட தகவல்

கடந்த 14 நாட்களுக்குள் ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்ட ஆபத்தான நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வரவில்லை என சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் எனப்படும் ஆபத்தான கோவிட் தொற்று தென்னாபிரிக்கா, நெமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாவே, லெஸதோ மற்றும் சுவாஸிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த எந்த ஒரு பயணியும் இலங்கைக்கு வரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களுக்கமைய இந்த விடயம் உறுதியாகியுள்ளதென சுற்றுலா அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஒமிக்ரோன் தொற்று குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *