ரி-10 பிலிப் சோல்டின் அதிரடியால் அபுதாபி அணி சிறப்பான வெற்றி!

ரி-10 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், அபுதாபி அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

அபுதாபியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அபுதாபி அணியும் சென்னை பிரேவ்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அபுதாபி அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை பிரேவ்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் செஷாத் 53 ஓட்டங்களையும் ரவி பொபாரா ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அபுதாபி அணியின் பந்துவீச்சில், லிவிங்ஸ்டன் 3 விக்கெட்டுகளையும் ஓவர்டொன், நவீன் உல் ஹக் மற்றும் பிரிக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 108 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை பிரேவ்ஸ் அணி, ஏழு ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அபுதாபி அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிலிப் சோல்ட் 63 ஓட்டங்களையும் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை பிரேவ்ஸ் அணியின் பந்துவீச்சில், மார்க் டியால் 2 விக்கெட்டுகளையும் கர்டிஸ் கெம்பர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 20 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிலிப் சோல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *