
நெடுந்தீவு கடற்கரையில் நேற்றுப் பிற்பகல் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலத்தை அவதானித்த பொதுமக்கள் நெடுந்தீவு பொலிஸாருக்கு அது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர். நெடுந்தீவுப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது என்றும், சடலத்தை இனங்காண முடியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, நேற்றுமுன்தினம் வல்வெட்டித்துறை மற்றும் மணற்காடு பிரதேசங்களிலும் சடலங்கள் கரையொதுங்கியிருந்தன.