ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் ஸ்தலத்திலேயே பலி

நுவரெலியாவில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஊழியர்களில் ஒருவர், ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் ஹோட்டலின் முகாமையாளரான 47 வயதான தரங்க பிரியந்த ஹெட்டியாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஹோட்டல் ஊழியர்கள் கடந்த 28 ஆம் திகதி விருந்து வைத்துள்ளனர். அதன் பின்னர் விருந்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் முகாமையாளரை அவர்கள் தங்கியிருந்த மற்றொரு விடுதியின் ஐந்தாவது மாடியிலுள்ள அவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இன்று (29) அதிகாலை 1.45 மணியளவில் குறித்த அறையின் ஜன்னலில் அமர்ந்திருந்த முகாமையாளர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த முகாமையாளரின் சடலம் நுவரெலியா நீதவான் பரிசோ தனையின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply