
தலைச்சுற்று, வாந்தி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் தாய் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, உதயநகர் கிழக்கைச் சேர்ந்த 19 வயதுப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் இரு மாதக் குழந்தையின் தாய் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 18ஆம் திகதி இவர் கிளிநொச்சி மருததுவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 22ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.