இலங்கை மீனவர்கள் நால்வர் இந்தியக் கடற்படையினரால் இன்று கைது!

இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு மற்றும் மீனவர்கள் நான்கு பேர் இன்று இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு இலங்கை மீனவர்களும், கடந்த செப்ரெம்பர் 26 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது முதல் நாளிலேயே படகு இன்ஜின் பழுது ஏற்பட்டுள்ளது.

குறித்த நால்வரும், காற்றுவாக்கில் அந்தமான் பகுதிக்கு சென்றுள்ளனர். நேற்று சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த IND TN 02 MM 2543 என்ற படகின் மூலம் இரவு 11.30 மணியளவில், திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதானி துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

இதையடுத்தே, இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு மற்றும் மீனவர்கள் நான்கு பேரும் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, கடந்த 24.10.2021 அன்று இந்திய கடலோர காவற்படை கப்பல், மேற்கண்ட இலங்கையைச் சேர்ந்த படகை சோதனை செய்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *