பொலிஸ் மாஅதிபர் நீதிமன்றத்தில் ஆஜர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான உரிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் இன்றையதினம் (29) நீதிமன்றில் ஆஜராகுமாறு சீ.டி. விக்ரமரத்னவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *