மகளிடம் சேட்டை புரிந்தவருக்கு காதறுப்பு ; தருமபுரம் பகுதியில் சம்பவம்

தனது மகளிடம் சேட்டை புரிந்த நபரொருவருக்கு காதறுத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம், கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில், 12 வயது மதிக்கத்தக்க மகளிடம் சேட்டை புரிந்தவரின் காதே இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளது.

அவருடைய கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில், தருமபுரம் வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் வெட்டப்பட்ட வாள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply