
கிழக்கின் நூறு சிறுகதைகளின் தொகுப்பு நேற்று கல்முனையிலும் வெளியீட்டு வைக்கப்பட்டது!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கின் நூறு எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று கல்முனையிலும் நடைபெற்றது.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் முதன்மை விருந்தினராகவும், கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர்
டாக்டர் இரா.முரளீஸ்வரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆகியோர் கௌரவ அதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவரும் சிரேஷ்ட்ட விரிவுரையாளருமான பேராசிரியர் றமீஸ்’ அப்துல்லா சிறப்புரை நிகழ்த்தினார். எழுத்தாளர் சிவவரதராஜன் இந்நூல் பற்றிய தொகுப்புரையாற்றினார்.
கிழக்கில் முக்கிய ஆவணத்தொகுப்பாக இந்நூலை வெளியிட்ட கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைகளத்துக்கும் அதன் பணிப்பாளர் ச. நவநீதனுக்கும் இந் நூலினை தொகுத்த எழுத்தாளர் உமாவரதராஜன் ஆகியோருக்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனார்.