முன்னாள் அரசியல் கைதி ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைப்பு!

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஒருவருக்கு பயங்கரவாத பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் இன்று அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே எதிர்வரும் 01.12.2021 ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்வதற்கு 2021ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு கெப்பிட்டல் கட்டம் நாரன்பிட்ட முகவரியில் 3ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 16ஆம் திகதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *