இந்திய இழுவைப் படகுகள் இன்றையதினமும் மாதகல் கடலில் அத்துமீறி உள்நுழைந்ததை காணக்கூடியதாக இருந்தது என மாதகல் கடற்றொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தாம் உடனடியாக மாதகல் கடற்படை பகுதியின் கட்டளைத்தளபதிக்கு அறிவித்ததாகவும், அவர்கள் தமது கடற்படை படகு கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் நிற்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அவர்களை கொண்டு விரட்டுவதற்கும் இயலுமாயின் கைது செய்வதற்குமான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்ததாக கடற்றொழில் சங்கத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.






