கம்பளை – நியங்கந்தர பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் மலசலகூடத்தில் இருந்து சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (29) திங்கட்கிழமை, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஆடைத்தொழிற்சாலையின் பின்புறம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, குறித்த சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.






