எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான, அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம்  அறிவித்துள்ளது.

நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த யோசனைக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அனுமதி வழங்கியமையை தொடர்ந்தே இந்த கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இதேவேளை எரிவாயு தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply