வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுமி மரணம்

மாத்தறை, வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்தில் எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

வெலிகம, வெவேகெதரவத்த பகுதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் வீட்டின் கூரை பலத்த சேதமடைந்துள்ளதுடன், உயிரிழந்த சிறுமியின் பாட்டியும் சகோதரியும் வீட்டிலிருந்து தப்பித்து வெளியேறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த வெலிகம பொலிஸார், வீட்டில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்களை வரவழைத்தனர்.

எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்படவில்லை என்பதை உறுதிபடுத்திய பொலிஸார், தீ விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply