நான் வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்ச்சியுடனே இருப்பேன் – யாஷிகா

நான் வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்ச்சியுடனே இருப்பேன் என நடிகை யாஷிகா  தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த தனது தோழியான பவணி குறித்து சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நான் இப்போது என்ன நிலையில், இருக்கிறேன் என்பது குறித்து விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும், குற்றம் உணர்ச்சியுடன் இருப்பேன்.

நீ என்னிடம் திரும்பி விடுவாய் என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன்னுடைய குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *