நடுவீதியில் புரண்ட பாரவூர்தி: ஒருவர் காயம்!(படங்கள் இணைப்பு)

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டியில் இருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்து சம்பவமானது வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்தில் பாரவூர்தி சாரதியான அம்பத்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சமித்த அத்தலங்க பன்டார என்பவரே காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *