வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா நேற்று(புதன்கிழமை) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

இயல், இசை, நாடகம் என பல்சுவை நிகழ்வுகளுடன் தமிழ் சிங்கள மற்றும் இஸ்லாமிய கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, வவுனியாவில் கலை வளர்ச்சிக்காக செயற்பட்ட கலைஞர்கள் வவுனியம் விருதும் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *