யாழில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, கோண்டாவில் பகுதியில் இருந்து 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளன.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிசாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தொழிற்சாலை ஒன்றினை நடாத்துவது போல் பாவனை செய்து குறித்த பகுதியில் இவ்வாறு கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் தப்பிச் சென்ற நிலையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply