பெண்ணை மூச்சடைக்க செய்த தனுஷ் குணதிலக்க-வழக்கில் இருந்து விலகிய சட்டத்தரணி!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மூச்சுத் திணறடித்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியது சிட்னி நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, தனுஷ்கா குணதிலக் தனது வீட்டில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், பின்னர் அவர் ஒரு கையை பெண்ணின் கழுத்தில் வைத்து 20 முதல் 30 வினாடிகள் வரை கழுத்தை நெரித்தார்.

இந்த பலாத்காரம் தொடர்பாக அப்பெண் துஷ்பிரயோக பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் தனுஷ்க குணதிலக்கின் வழக்கு தொடர்பாக சிட்னி மோர்னிங் ஹெரால்டில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கின் வழக்கு தொடர்பான விடயங்களை பகிரங்கப்படுத்த ஊடகங்களுக்கு சிட்னி நீதவான் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டை அடுத்து தடையை நீக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

பெண்ணின் அனுமதியின்றி பாலியல் பலாத்காரம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள தனுஷ்க குணதிலக்க, காணொளி தொழில்நுட்பம் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன் போது பலாத்காரம் நடந்த விதம் தொடர்பான முழுமையான அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். முழு அறிக்கையை சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ளது.

விசாரணைகளின் போது முறைப்பாட்டாளர் முன்வைத்த சில விடயங்களை தனுஷ்க குணதிலக்க ஒப்புக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக் சார்பில் கடந்த திங்கட்கிழமை ஆஜரான சட்டத்தரணி ஆனந்த அமரநாத், வழக்கிலிருந்து விலகினார். தனுஷ்க குணதிலக் சார்பில் பாரிஸ்டர் சாம் பரராஜசிங்கம் மற்றும் சட்டத்தரணி சாரா பிளேக் ஆகியோர் ஆஜராகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *