இங்கிலாந்துக்கு இந்தியா நிர்ணயித்த வெற்றி இலக்கு!

2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் ஹர்திக் பாண்டியா 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற மூன்றாவது அரைச்சதம் இதுவாகும்.

ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், விராட் கோலி 50 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 37ஆவது அரைச்சதம் இதுவாகும்.

விராட் கோலி 40 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக இவ்வாறு 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

மேலும், ரோஹித் சர்மா 27 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 14 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 5 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் கிறிஸ் ஜோர்தன் 43 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷித் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், கிறிஸ் வோக்ஸ் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 03 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்து அணி 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *