பாராளுமன்றத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதனை தடுத்து நிறுத்த முயற்சித்த மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,
பொலிஸாரின் ஆணையை மீறி ஆர்ப்பாட்ட காரர்கள் முன்னோக்கி நகர்ந்த போது வீதித் தடைகள் போடப்பட்டிருந்தன. அவற்றை தகர்த்துத் தள்ளி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்ல முயற்சித்தனர்.
இதன்போது, மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் இரண்டு விரல்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்