அரசாங்கத்திற்கு எதிராக யாழில் அமைதிப் போராட்டமொன்று இன்று (04) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினால் யாழ். பல்கலைக்கழக நுழைவாயில் குறித்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் இலவசக் கல்வித் துறையினைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தப்படும் நாட்டின் கல்வித் துறையில் இடம்பெறும் இராணுவ மயமாக்கம் மற்றும் தனியார் மயமாக்கத்தினை எதிர்க்கவும், நாட்டின் கல்வித் துறையில் ஏற்படும் அரசியல் தலையீடுகளை நிறுத்தவும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.