சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் சீனாவில் 71 புதிய கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது சீனாவில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட குறைந்த வயதினரையும் இலக்கு வைத்து தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்துள்ளது.
சீனாவில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் மொத்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும் இதுவரையில் சீனாவில் 1.6 பில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா இந்த வருட இறுதிக்குள் அதன் சனத்தொகையில் 80 முதல் 85 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் இலக்கினை கொண்டு செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.