இந்திய அணியில் மேலும் சிலருக்கு கொரோனா!

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த இந்திய அணியின் மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யுஸ்வெந்தர் சஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவருமே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சகலதுறை வீரர் க்ருணல் பாண்ட்யாவுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது.

Advertisement

இதனையடுத்து, க்ருணல் பாண்ட்யாவுக்கு தொற்று உறுதியானதையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக அடையாளம் காணப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, தீபக் சஹர், இஷன் கிஷன், யுஷ்வெந்தர் சஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய 8 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால், இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான இண்டாவது டி20 போட்டி பிற்போடப்பட்டது.

பின்னர் மாற்றுவீரர்களுடன் மீண்டும் டி20 தொடர் ஆரம்பிக்கப்பட்டு, நேற்றைய தினம் (29) போட்டித்தொடர் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *