ஆசிரியர் – அதிபர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாடத்தில் கலந்து கொண்ட தங்காலை பகுதியைச் சேர்ந்த 37 ஆசிரியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தங்காலை சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி தங்காலை தங்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் மாவத்த பகுதியிலுள்ள ஆசிரியர் மூவரும், அதிபர் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
குறித்த 4 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட 51 பேர் மீது நேற்றைய தினம் (03) மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 33 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த கொரோனா தொற்றார்கள் 37 பேரும் அம்பலாந்தோட்டையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.