பலமான சக்தியொன்று மிகவிரைவில் எழுந்து நிற்கும்-மைத்திரி

நமக்கான சரியான நேரம் வரும்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தனியாக போட்டியிடும். அவ்வாறு போட்டியிட்டு ஆட்சியையும் கைப்பற்றும் என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டார்.

புத்தளத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்குப் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் எவையும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த அவர், ஆகையால் மக்கள் மனவேதனையுடன் வேண்டா வெறுப்பாக இருக்கின்றனர் என்றார்.

மேலும், விழுந்துகிடக்கும் மிகவும் பலமான சக்தியொன்று மிகவிரைவில் எழுந்து நிற்கும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், கட்சியின் அமைப்பை பலப்படுத்தினால் அச்சக்தியை எழுப்பி நிற்கச்செய்வது அவ்வளவு கடினமான காரியமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *