நாடாளுமன்றம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றமையால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவை நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில், எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.  இதனையடுத்து அவை நடவடிக்கைகள் பிற்பகல் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜுலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *