இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா – சில வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டின் சில வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடனகப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளதாலும் வைத்தியசாலையில் கடமையாற்றிய பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாலும் இவ்வாறு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக காலி வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *