யாழ். பருத்தித்துறை – புலோலி பகுதியில் முதியவர் ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, வீதியால் பயணித்த பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் புலோலி – சாரையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த செபஸ்டியன் பாலேந்திரன் 82 வயது முதியவர், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.