நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 94 பேர் நேற்று (04) மரணித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 49 ஆண்களும், 45 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4821 ஆக அதிகரித்துள்ளது.