இலங்கையிலுள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசாா் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் தலா 10 ரூபாவை மேலதிகமாக வழங்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை இவ்வாறு இலங்கை ரூபாவாக மாற்றப்படும்போது ஒவ்வொரு டொலருக்கான ஊக்குவிப்புத்தொகையாக 10 ரூபா வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






