முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மீற்றர் இயந்திரத்தை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம் இல்லை எனவும் சாரதியிடம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் 15ஆம் திகதி முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் இயந்திரத்தை கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் இயந்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply