கிணற்றில் விழுந்து பெண் பரிதாப மரணம்!

பெண்ணொருவர் கிணற்றில் விழுந்து மரணமடைந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கண்டி – கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந் 65 வயது பெண்ணே இவ்வாறு மரணமடைந்தார்.

பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply