பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை – ராஜ்நாத் சிங்

பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை என பாதுகாப்புத்துறை அசைமச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்திக்கு  அடிக்கல் நாட்டிவைத்து  பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “எந்த நாட்டிற்கும் நம் மீது தீய பார்வையை செலுத்த துணிச்சல் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் அவை உருவாக்கப்படுகிறது.

எப்பொழுதோ இந்தியாவில் இருந்து பிரிந்து நாட்டின் நோக்கங்கள், மோசமாகவே இருப்பது ஏன் என்று புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த உற்பத்தி அலகு அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையாக கட்டமைக்கப்படும். ஆண்டிற்கு 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணைகள் உற்பத்தி செய்யப்படும் எனப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *