கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி ஒருவர் ஸ்தலத்தில் பலி!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 96ஆம் கட்டை முள்ளிப்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும், திருகோணமலையை நோக்கி மண்கலந்த சிறிய கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன சாரதியே இவ்வாறு ஸ்தளத்தில் பலியாகியுள்ளார்.

டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்ததுடன் பெகோ இயந்திரத்தினை கொண்டு விபத்துக்குள்ளான வாகனத்தினை அப்புறப்படுத்தியிருந்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *