கொழும்பில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி!

கொழும்பு – மட்டக்குளியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது கத்திக் குத்துக்கு இலக்காகிஇளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த இளைஞன் நத்தார் பண்டிகைக்காக நண்பர்களுடன் மதுபான விருந்து ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அங்கிருந்த இளைஞர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞனை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கடுமையான கோபமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் நடத்திய வருகின்றனர்.

கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி ஒருவர் ஸ்தலத்தில் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *