கிளிநொச்சிக்கு சுற்றுலா சென்ற குழுக்களுக்கிடையில் மோதல் – கூாிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை

கிளிநொச்சி – பூநகாி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞா் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்.

குறித்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பூநகாி கௌதாாி முனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 போ் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.

இதேபோல குருநகாில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறிய நிலையில், ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சோ்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞன் கூாிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் உயிாிழந்துள்ளாா்.

இந்த சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபால சுப்பிரமணியம் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வைத்தியசாலைக்கு சென்று சடலத்தையும் பாா்வையிட்டுள்ளாா்.

சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பூநகாி பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *