தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என்றும், கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் குறைந்தபட்சம் ஒரு வேளை உணவையாவது சாப்பிட முடியுமா என்ற கவலையில் உள்ளனர் எனவும் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
காலியில் பொருளாதார நெருக்கடி குறித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தற்போது ஏமாற்றமடைந்துள்ள மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஒரு வேளை உணவைக் கூட வாங்க முடியாத சூழலில் அரசாங்கம் மக்களை இரண்டு வேளை உணவு உண்பதை ஊக்குவித்துள்ளது.
அத்துடன், சில அமைச்சர்கள் தமது சொந்த உணவை வீட்டிலேயே பயிரிடுமாறு மக்களை ஊக்குவிக்கின்றனர்.
உர நெருக்கடியால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைக் காண அரசாங்கத்துக்கு நிபுணர்களின் ஆலோசனை தேவையில்லை.
நடைமுறை வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தப்படாவிடின், தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.