கல்முனை மாநகர சபை உறுப்பினராக வர்த்தகர் றஜப்தீன் பதவியேற்பு

கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள வர்த்தகரும் சமூகசேவையாளருமான எம்.ஜ.எம்.றஜப்தீன் இன்று திங்கட்கிழமை தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பிடம் கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வு மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்ஸார், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப், மாநகர சபையின் முன்னாள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினரும், கல்முனை பிராந்திய அமைப்பாளருமாகிய ஏ.ஜீ.எம்.நதீர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஜ.எம்.மஸீன், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ரி.இராஜரட்ணம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *