இலங்கை பிரஜைகளின் திருமண சுதந்திரத்தை தடை செய்வது கேலிக்கூத்து! கரு ஜயசூரிய

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கை, நாட்டு பிரஜைகளின் சுதந்திரத்தை பாதிக்கும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கையென முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாகரீகமான அரசிடம் இருந்து இப்படி ஒரு விடயத்தை எதிர்பார்க்கவே முடியாது. இத்தகைய ஒழுக்கக்கேடான கட்டுப்பாடுகள் சர்வாதிகார ஆட்சிகளில் மட்டுமே காண முடியும்.

இது அரசியலமைப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

வெளிநாட்டினரை அரசில் சேர்ப்பதற்காக நாட்டின் அரசியலமைப்பைக் கூட திருத்தியமைக்கும் வகையில் தமது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்திய ஆட்சியாளர்களின் இந்த முடிவு நெறிமுறையற்றதாகும்.

எனவே, வெளியுலகில் இலங்கையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் எனவும் முன்னாள் சபாநாயகர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட கலாசார படுகொலை தொடர்கிறது! சபா குகதாஸ் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *