ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் இழுத்தடிப்பு! இராதாகிருஸ்ணன் எம்.பி சாடல்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மத்திய மாகாணத்தில் மாத்திரம் ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்வதற்கான காரணம் என்ன?

இந்த அரசாங்கம் மலையக மக்களை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் பார்க்கின்றதா? அல்லது மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற அமைச்சர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதில்லையா என்ற கேள்வி எழுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *