மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரி வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து போராட்டம்!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை,வடமுனை மக்கள் வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமுனை,ஊத்துச்சேனை பகுதியில் காடுகளை அழித்து முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தகோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊத்துச்சேனை வடமுனை கிராம பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

சட்டவிரோத மணல் அகழ்வினால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மண் அகழ்வு காரணமாக அன்றாடம் பயன்படுத்தும் வீதி போக்குவரத்து செய்ய முடியாமலிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு பகுதிகளிலும் லொறிகளில் தினமும் பெருமளவான மண் சட்ட விரோதமான முறையில் அகழப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *