யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தொழில் நிமித்தம் மரம் தறித்தவர் ஒருவர் அதே மரத்தின் கீழ் சிக்கி படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சூழாம்பதி, தெல்லிப்பழையைச் சேர்ந்த 14 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான எட்வேட் மதிவண்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
தெல்லிப்பழை, மாசியப்பிட்டி பகுதியில் தொழில் நிமித்தம் நால்வர் சேர்ந்து மரம் ஒன்றைத் தறித்துள்ளனர்.
குறித்த நபர், மரம் வீழ்ந்தபோது அதன் கீழ் சிக்கிய நிலையில், உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகின்றது.