எதிர்வரும் ஜனவரி 15 முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் அவசியம்

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவீட்டுக்கான மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி, இதற்கான விதிமுறை அமலாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்குள், இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணங்களை அறவிடுவதற்கான மீட்டரை பொருத்துதல் கட்டாயமாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *