யாழில் தலைவலியால் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம்…..!

தலைவலியால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிரேஸ்குமார் ஞானசீலி (வயது 37) என்ற பெண்ணே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.

கடந்த சில தினங்களாக தீவிர தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றய தினம் அவர் உயரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *